நீயறிவாயா?
*******************
யாரிடமும் கேட்க வேண்டியதில்லை
பழக்கப்பட்ட வழி தான்
எப்போதும் புன்னகைக்கும்
அந்த அண்ணனின் கடை திறந்திருந்ததா?
யாரிடமோ சத்தமாய் பேசும்
அந்த மாமா இன்று பேசிக்கொண்டிருந்தாரா?
உணவகத்தில் வேலையாளை அதட்டும்
அந்த முரட்டு முதலாளி இன்றிருந்தாரா?
வழக்கமாய் பூத்திருக்கும்
அந்த முதல் வீட்டு செம்பருத்தி இன்று பூத்திருந்ததா?
காலடி சத்தம் கேட்டதுமே குரைக்கும்
அந்த மூன்றாவது வீட்டு நாய் இன்று குரைத்ததா?
எதிரே சட்டென்று நிறுத்தி
அந்த ஓட்டுநர் திட்டும் வரை
ஏதும் நினைவில் இல்லை
No comments:
Post a Comment