சுற்றி இருப்பதெல்லாம்
விருப்பம் போல சுழன்று கொண்டிருக்க
விருப்பமின்றி மனம் தனித்திருக்கிறதே
எட்டும் தூரத்தில் நீயில்லையே
கட்டியணைத்து சரிசெய்திருப்பேனே
உடைந்த நம் இதயத்தை
மிச்சமிருந்த எச்ச நம்பிக்கையும்
சுக்கு நூறாகிறதே
உச்சென்ற உன் சுழிப்பிலே
எத்தனை தொலைவு செல்கிறேனோ
அத்தனை கனத்த இதயத்துடன் திரிகிறேன்
நீயில்லா உலகில்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
வார்த்தைகள் உணர்த்திடாது
என் வலியை
வழித்தடம் தெரியாமல் கரைபுரளும்
கண்ணீர் தெரியும் தொலைவிலும் நீயில்லை
நினைவில் இருப்பதெல்லாம் ஒன்றே
நீ மட்டுமே
இத்தேடலின் முடிவு
நீயும் நினைவில் கொள்ளடி
No comments:
Post a Comment