Monday, 6 January 2020

தேடல்

சுற்றி இருப்பதெல்லாம் 
விருப்பம் போல சுழன்று கொண்டிருக்க
விருப்பமின்றி மனம் தனித்திருக்கிறதே

எட்டும்‌ தூரத்தில் நீயில்லையே
கட்டியணைத்து சரிசெய்திருப்பேனே
உடைந்த நம்‌ இதயத்தை

மிச்சமிருந்த எச்ச நம்பிக்கையும்
சுக்கு நூறாகிறதே
உச்சென்ற உன் சுழிப்பிலே

எத்தனை தொலைவு செல்கிறேனோ
அத்தனை கனத்த இதயத்துடன் திரிகிறேன்
நீயில்லா உலகில்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

வார்த்தைகள்  உணர்த்திடாது
என்‌ வலியை
வழித்தடம் தெரியாமல் கரைபுரளும்
கண்ணீர் தெரியும் தொலைவிலும் நீயில்லை

நினைவில் இருப்பதெல்லாம் ஒன்றே
 நீ மட்டுமே 
இத்தேடலின் முடிவு
நீயும் நினைவில் கொள்ளடி 

No comments:

Post a Comment

Happy Birthday

Niraya solanum But soldra nilamai la nanum  Ketkura nilamai la neeum ila nu ninaiken.... Life isn't easy without you Epothume santhosama...