நான் யார்.?
ஒவ்வொரு முறையும்
தோல்வியின் மேலே
அமர்ந்து அழகு பார்த்தவன்
காரணங்கள் தேடி பயணப்பட்டு
அதில்லை இதில்லை
என்றெண்ணி மீண்டும் சிம்மாசனமிட்டேன்
தோல்வியின் மீதே
என் வழியில் கண்ட
முள்ளுக்கு காக்கையை
காரணம் கட்டி அசையாதிருந்தேன்
காலம் அப்படியன்று
சுழன்று கொண்டேயிருந்தது
அருகே செல்பவன்
கால்களை பார்த்து பொறாமைபட்டவன்
அவன் எதிர்கொண்ட முட்புதரைப் பார்க்கவேயில்லை
எதிர்பாரா தருணமொன்றில்
தேவதையாய் வந்திறங்கியவள்
அழகாய் சொல்லிச் சென்றாள்
உனக்கும் இரண்டு கைகளுண்டென..
ஆம் சொல்லிச் சென்றாள்
No comments:
Post a Comment