தூரத்து நிலவை
சில நேரங்களில் கருமேகங்களுக்கு மத்தியில்
அவ்வப்போது முழுவதுமாக
திடீரென்று இல்லாமலே போய்விடும்
பல நேரங்களில் பாதியாக
இருந்தாலும் ரசிக்கத்தான் செய்கிறேன்
தூரத்தில் இருந்து
நீரில் மிதக்கும் பிம்பத்தை
நினைவுகள் சுமக்கும் பொழுதுகளை
மின்சாரம் தொலைத்த இரவுகளை
கடந்து கொண்டிருக்கிறேன்
தூரத்து நிலவை ரசித்துக்கொண்டே
தூரத்தில் இருந்து
நிலவுக்கு கேட்கப்போவதில்லை
மின்மினிகளின் கூப்பாடு
இருந்தாலும் தொடர்கிறது
என் வாழ்த்துக்களைப் போல
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment