Friday, 13 March 2020

யாதும் காதலாய் வேண்டும்

யாதும் காதலாய் வேண்டும்
நீ
நான்
நாம்
எங்கு திரும்பினும் காதலாய் வேண்டும்
சில பல சண்டைகளும் காதலாய் வேண்டும்
விழி வழி பேசும் காதலாய் வேண்டும்
வழிநெடுக பேசும் காதலாய் வேண்டும்
மௌனத்திலும் காதல் வேண்டும்

Thursday, 5 March 2020

அலைபாயுதே

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்


என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

Tuesday, 3 March 2020

இன்பமென்பது

இரக்கமில்லா இரவுகளில்
இன்பமென்பது பதில் பேசா
உன் நினைவுகளோடு உரையாடுவது

Monday, 13 January 2020

நான்‌ யார்.?

நான்‌ யார்.?
ஒவ்வொரு முறையும்
தோல்வியின் மேலே
அமர்ந்து அழகு பார்த்தவன்

காரணங்கள் தேடி பயணப்பட்டு
அதில்லை இதில்லை
என்றெண்ணி மீண்டும் சிம்மாசனமிட்டேன்
தோல்வியின் மீதே

என் வழியில் கண்ட
முள்ளுக்கு காக்கையை 
காரணம் கட்டி அசையாதிருந்தேன்
காலம் அப்படியன்று 
சுழன்று கொண்டேயிருந்தது

அருகே செல்பவன் 
கால்களை பார்த்து பொறாமைபட்டவன்
அவன் எதிர்கொண்ட முட்புதரைப் பார்க்கவேயில்லை

எதிர்பாரா தருணமொன்றில்
தேவதையாய் வந்திறங்கியவள்
அழகாய் சொல்லிச் சென்றாள்
உனக்கும் இரண்டு கைகளுண்டென..

ஆம் சொல்லிச் சென்றாள்




Happy Birthday

Niraya solanum But soldra nilamai la nanum  Ketkura nilamai la neeum ila nu ninaiken.... Life isn't easy without you Epothume santhosama...