Thursday, 17 August 2017

நா முத்துக்குமார்

நா முத்துக்குமார்

எதார்த்தமும் எளிமையும்
உன் கவிதையின் இயல்பாயின...!

பூட்டி வைத்திருந்த
என் ஏக்கங்கள் உடைபட்டன
உன் கவிதையில்...!

இன்றும் மரணத்தை தேடுகின்றன
உன் விரல்படா பேனாக்கள்
கைபடா காகிதங்கள்....!

எப்படி அடுக்கினாய்
என் வலியையும் வேதனையையும்
சந்தோஷத்தையும் துக்கத்தையும்
உன் கவிதைக்குள்...!

காலம் கடந்தும்
கன்னிகாபுரத்து கவிதைக்காரனின்
வரிகள் வாழட்டும்...!!

Sunday, 13 August 2017

மழையில் துப்பட்டா-Shawl in Rain

மழையில் துப்பட்டா

காயப்போட்ட உன் துப்பட்டாவில்
ஓவியம் வரைகிறான் பிரம்மன்
மழை எனும் தூரிகை கொண்டு....!!

Shawl in Rain

In your drying Shawl
Brahman is painting
by the Rain as Brush...!

Friday, 11 August 2017

நாணயம் -Coin

நாணயம் 

எண்ணிக்கையில் அதிகமிருந்தும்
ஏனோ ஏளனமாகவே பார்க்கிறோம்
ஏழைகளைப் போலவே....



Coin

There are too many numbers
We look so ridiculous
Like the poor ...

Happy Birthday

 நினைவுப் பெட்டகம் நிரம்பி வழிய அடுக்கடுக்காய்  வந்து சேரட்டும் பேரழகியின் நாட்குறிப்பில்  பிரபஞ்சத்தின் இன் பொழுதுகள் இன்று போல் என்றென்றும...